Begin typing your search above and press return to search.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: செந்துறை போலீசார் வழக்கு
சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து குறித்து, செந்துறை போலீசார் வழக்குபதிவு விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், சொக்கநாதபுரம் மெயின்ரோட்டில் எதிர் திசையில் வேகமாக வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார். அருகில் இருந்த கிராம மக்கள் காயம் அடைந்த ராஜவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக் குறித்து ராஜவேலின் தம்பி மருதுபாண்டியன் செந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் பாண்டியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.