/* */

அரியலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

அரியலூர் அருகே மேலப்பழுவூரில் உள்ள கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

மேலப்பழுவூர் கிராமத்தில் கல்குவாரியை மூடவேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் அதனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷுக்கு 42 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில் செயல்படும் கல்குவாரியில், பூமிக்கடியில் இருக்கும் கருங்கல்லை வெடி வைத்து தகர்த்து, ஜல்லி ஆக்கும் பணி நடைபெறுகிறது. புதிதாக அமைக்கப்படும் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இந்த ஜல்லிகற்கள் இங்கிருந்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பூமிக்கடியில் வெடி வைத்து கருங்கல்லை உடைக்கும்போது ஏற்படும் நில அதிர்வுகளால் பெரிதும் கிராமத்தில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், வீடுகளில் அதிர்வுகள் உண்டாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனையடுத்து இந்த கல்குவாரியை மூடவேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களை சமாதனப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 7 Oct 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?