அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று, யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; மருத்துமனைகளில் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் நேற்று, கொரோனாவால் ஒருவரும் பாதிக்கவில்லை. ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியள்ளார். மருத்துமனைகளில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 16,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,675 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் நேற்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 330 பேர். இதுவரை 3,48,367 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,948 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,31,419 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,671. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,63,633. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 47,461 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,889 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 45,474 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 98 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.