அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 17944 பேர்.
HIGHLIGHTS
19ம் தேதி கொரோனா நிலவரம்
அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 14 பேர். மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,207 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 189 பேர். இதுவரை 3,02,296 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,595 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,85,701 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,227. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,95,762. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,850 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,830 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 36,948 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 72பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 17944 பேர்.