Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணாசிலையருகில் பெட்ரோல்- டீசல் - கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திட கோரி சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெட்ரோல்- டீசல் - கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திட கோரி சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணாசிலையருகில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திட கோரி, புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் வாங்க கோரி, மத்திய அரசை கண்டித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சந்தானம், ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். இதில் TNSTC -CITU முருகன், அரியலூர் டாடா ஏசி ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் வேன் கார் ஒட்டுனர் சங்கம் பன்னீர்செல்வம், சௌந்தராஜன், கைகாட்டி ஆட்டோ சங்கம் பார்த்திபன், இளையராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.