இருமலை இல்லாமல் செய்யும் செட்ரிசின் சிரப் தெரியுங்களா? படிச்சு பாருங்க புரியும்.......
Cetirizine Hydrochloride Syrup Uses in Tamil-மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களுள் முக்கியமானவையாக கருதப்படுபவை சளி, காய்ச்சல், இருமல் இவைகள்தான். இவையனைத்திற்கும் ஒரு சிலர் தாங்களாகவே கை மருந்து எடுத்து கொள்வார்கள்.ஒரு சிலர் சித்தா,மற்றும் ஆயுர்வேத, மருந்துகளை உட்கொள்வார்கள்.
எது எப்படியோ குணமானால் பரவாயில்லை என நாம் நினைப்பது முற்றிலும் தவறானதாகும். அது சித்தா, ஆயுர்வேதா, அல்லது அலோபதி எந்த மருத்துவ முறைகளாக இருந்தாலும் டாக்டர்களிடம் தான் சிகிச்சை பெற்று அவர் பரிந்துரையின் பேரில்தான் இதற்கான மருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டும்.ஆனால் இன்றும் பலர் மருந்து கடைகளில் தாங்களாகவே வாங்கி சாப்பிடுகின்றனர். சட்டப்படி மருத்துவரின் பரிந்துரை (பிரிஸ்கிரிப்ஷன் ) சீட்டு இல்லாமல் மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிப்பது குற்றம் .அதுவே குணமாகிவிட்டால் ஓகே. பக்கவிளைவுகளால் விபரீதம் ஆகி விட்டால் இதனை யாருமே நினைத்து பார்ப்பதில்லை. எனவே முடிந்தவரை யாருமே நீங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
.cetirizine syrup uses in tamilசெட்ரிசின் சிரப்பானது செட்ரசின் மற்றும் ஆம்ப்ரோக்ஸால் மருந்துகளின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இவை இருமலுக்கான சிறந்த மருந்தாக டாக்டர்களினால் பரிந்துரைக்கப்படுகிறது.நம் உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜியால் தீமைகள் ஏதும் ஏற்படாது. அலர்ஜியானது மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஒரு சில அலர்ஜிகள் சீசன் போன்று வரும் .ஒரு சில ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதினால் வரும்,இதனால் காய்ச்சல் வர வாய்ப்புண்டு. ஒரு சில அலர்ஜிகள் மகரந்தம் மற்றும் வளர்ப்பு பிராணிகளினால் வரக்கூடியது. இதில் ஒரு வகையான அலர்ஜிதான் இருமல். இருமல் ஏன் வருகிறது எ ன்றால் தொண்டையில் ஏற்படக்கூடிய சளி மற்றும் வேறு ஏதேனும் வலி அல்லது எரிச்சலினால் ஏற்படும்.
செட்ரிசின் என்பது ஆன்டிஹிஸ்டமைன்அல்லது ஆன்டி அலர்ஜிக் வகையான மருந்துபொருள் ஆகும். இதனால் சளி ஒழுகல், கண்களில் நீர் ஒழுகல், அரிப்பு, தும்மல், வீக்கம், நெரிசல், விறைப்பு தன்மை உள்ளிட்ட அறிகுறிகளைக்கொண்ட அலர்ஜிகளிலிருந்து விடுவிக்கிறது.
.cetirizine syrup uses in tamilசெட்ரிசின் மருந்தை உணவுக்கு முன்னதாகவோ,உணவுக்கு பின்னரோ டாக்டர்கள் சொல்வதைப்போல் உட்கொள்ளவேண்டும். மேலும் உங்கள் உடல்நிலையைப் பொறுத்து டாக்டர்கள் இதனை பரிந்துரைப்பார்கள்.ஒரு சிலருக்கு சோர்வு, துாக்கம் வருதல் போன்ற உணர்வு, உலர்ந்த வாய், உள்ளிட்டஅறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்ச நேரத்தில் நார்மல் நிலைக்கு வந்துவிடுவார்க அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் உடனடியாக உங்கள் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம் ஆகும்.
யாராவது ஒருவர் இந்த மருந்தின் பெயரை உங்களுக்கு சொன்னார் என்று கடைகளில் வாங்குவது உட்கொள்வது கூடாது. உரிய முறைப்படி டாக்டரிடம் சிகிச்சை பெற்று அவர்பரிந்துரைத்த பின்னரே நீங்கள் மருந்தை உட்கொள்ள வேண்டும். அதேபோல் கல்லீரல் அல்லது கிட்னி சம்பந்தமான உபாதைகளினால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் டாக்டரிடம் இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலுாட்டும் தாயாக இருந்தாலோ அல்லது நீங்களாகவே மருந்து கடைகளில் வாங்கி சாப்பிட்டு வந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நோய்களுக்கு பிற டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மருந்தினை உட்கொண்டு வந்தாலும் அனைத்தையும் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும்போது தகவல் தெரிவித்துவிடுவது நல்லது.
மருந்து உட்கொள்வது எப்படி?
.cetirizine syrup uses in tamilஉங்களுக்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே இந்த மருந்தினை உட்கொள்ள வேண்டும்.நீங்களாகவே இதனை உட்கொள்ளக்கூடாது. உங்களுடைய உடல் ஆரோக்யத்துக்கு தகுந்தாற்போல்டாக்டர் சொல்லியபடி மருந்து உட்கொள்ள வேண்டும். உணவுக்கு முன்னரோஅல்லது உணவுக்குபின்னரோ டாக்டர் அறிவுறுத்தலின்படி இம்மருந்தினை உட்கொள்ள வேண்டும்.
இதுவே மாத்திரையாக இருந்தால் தண்ணீரில் விழுங்க வேண்டும். இதனை உடைத்து உட்கொள்ளக்கூடாது. மெல்லக்கூடாது. சிரப்பாக இருந்தால் உபயோகிக்கும் முன்பாக நன்கு குலுக்க வேண்டும். டாக்டர் சொல்லிய அளவிற்கு அளவு கப்பில் ஊற்றி உட்கொள்ள வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu