திருவண்ணாமலை: டூவிலரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
திருவண்ணாமலையில், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்த கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி மேற்பார்வையில், தி.மலை நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், தனிப்படை காவலர்கள், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த விஜயன் என்பவர், இருசக்கர வாகனத்தில், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.