திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-24 06:49 GMT

திருவண்ணாமலை புறவழி சாலை சகாய நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா (வயது 55). இவர் நாவக்கரை பகுதியில் உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

ஆடி மாதம் என்பதால் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து ஜமுனா இரவு சுமார் 10 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நாவக்கரை மெயின் ரோடு பகுதியில் ஜமுனா நடந்து வந்தபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜமுனாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

ஜமுனா திருடன், திருடன் என்று கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.இதுகுறித்து ஜமுனா திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News