வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே ரயில்வே ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-11 04:30 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பெருமாள் பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் பாபு (57). இவர் ரயில்வே துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணமாகி அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று மகளை பார்க்க கணவன், மனைவி இருவரும் சென்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்  பீரோவை உடைத்து அறையில் இருந்த தங்க கம்மல், செயின், மோதிரம், ஒரு டேப் 10 சவரன் தங்க நகைக,ள் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் பூஜை அறையில் இருந்த இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாபு திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை மலை வீச்சு தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News