திருச்சியில் வ.வே.சு. அய்யர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் வ.வே.சு. அய்யர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

Update: 2022-04-03 05:05 GMT

வ.வே.சு. அய்யர் படத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சு.அய்யரின் 142- பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி வரகனேரியில் உள்ள வெவ்வேறு வ.வே.சு.அய்யரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பெயரில் உள்ள கிளை நூலகத்தையும் பார்வையிட்டார்.

அதன் பின்னர் தியாகி வ. வே. சு. அய்யரின் புகழை, வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் உரையாற்றினார்கள். அந்த மாணவ, மாணவிகளை கலெக்டர் சிவராசு அந்த மாணவிகளை பாராட்டினார்.

இந்த விழாவில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி ,மாவட்ட நூலக அதிகாரி சிவகுமார், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News