திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டியில் பதிவு செய்ய இன்று கடைசி நாள்
திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டியில் பதிவு செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் 2022 ஸ்டேட் பேங்க் மோகன் நினைவு சுழற்கோப்பைக்கான இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் சிறப்புடன் நடைபெறுவதற்கும், அதிக அளவில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அதிக பதக்கங்களை பெற்று நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்க தங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கும்படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தடகள போட்டி கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய இன்று 16.09.22 கடைசி நாளாகும்.இது தொடர்பாக 8680808268என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.