சமூக சேவகருக்கான விருது பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

சமூக சேவகருக்கான விருது பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-26 10:25 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்(ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் ம தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 2022-2023 நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in  என்ற இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது. சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 30.06.2022 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News