திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் இன்று காலை 11 மணிக்கு நல்லிணக்க நாள் உறுதிமொழியை படிக்க மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா , செயற்பொறியாளர்கள் .ஜி. குமரேசன் கே. பாலசுப்பிரமணியன் மற்றும் மநகராட்சி அலுவலர்களும், பணியாளர்களும் திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.