திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-03-10 06:06 GMT

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.

திருச்சி பெரியகடைவீதி பக்கம் உள்ள வளையல் கார தெருவில் அமைந்துள்ளது சக்திமிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பால்குட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு 51வது ஆண்டு பால்குட திருவிழா செவ்வாய்க்கிழமை  தொடங்கியது. அப்பகுதி மக்கள் அம்மனுக்கு பூக்களை சாத்தி வழிபாடு செய்தனர்.

விதவிதமான பூக்கள் அலங்காரத்தில் அம்மன் அப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதிகளை  சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை காலை சிந்தாமணி காவிரி ஆற்றின் படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அதன் பின்னர் தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலரும் திருப்பணி குழு தலைவருமான கே‌.சி. ஆறுமுகம் மற்றும் இளைஞர் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்

Tags:    

Similar News