திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி ஜே.கே. நகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் நடந்தது.

Update: 2021-10-24 15:26 GMT

திருச்சி ஜே.கே. நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சி 35- வது வார்டு ஜே.கே. நகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் சங்க கட்டிடம் அருகிலுள்ள பூங்காவில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

சங்க கவுரவ ஆலோசகர் கருணாநிதி வரவேற்றுப் பேசினார். இந்த கூட்டத்தில் ஜே.கே. நகரில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சில தெருக்களில் மழை நீர் தேங்கி நடக்க முடியாத அளவுக்கு உள்ள இடங்களில் தற்காலிகமாக பாதை அமைத்துக் கொடுப்பது, அனைத்து தெருக்களுக்கும் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர திருச்சி கிழக்கு  சட்டமன்ற உறுப்பினரை அணுகுவது, அனைத்து தெருக்களிலும் புதிதாக மின் கம்பங்களை நட்டு மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேராசிரியர் ஷேக் இஸ்மாயில், கேப்டன்,பொருளாளர் வீரய்யா நிர்வாகிகள் நேரு, ஆறுமுகம், ரசீது, அன்பரசு, ஆரோக்கியசாமி, பாலு, மன்சூர்,குமார், ஸ்டீபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News