மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாளை திருச்சி பொன்மலையில் நடைபெற உள்ளது.

Update: 2022-06-22 06:44 GMT

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்கத்தில் மாநில அளவில் நிர்வாகியாக இருந்தவர் சி.கண்ணையன். திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமாக இருந்தவர். அவரது ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சி.கண்ணையன் உருவப்படத்திற்கு ம.தி.மு.க. நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ம.தி.மு.க. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News