தூத்துக்குடியில் முககவசம் அணியாத 568 பேருக்கு அதிரடி அபராதம்

Update: 2021-05-14 04:27 GMT

கோப்பு படம்

 கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில்  நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 226 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 42 பேர், திருச்செந்தூர் 35 பேர், ஸ்ரீவைகுண்டம் 30 பேர், மணியாச்சி 73 பேர், கோவில்பட்டி 86 பேர், விளாத்திகுளம் 55 பேர் மற்றும் சாத்தான்குளத்தில் 21 பேர் என மொத்தம் 568 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,13,600 பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 7 பேர், கோவில்பட்டி 5 பேர், விளாத்திகுளம் 3 பேர் மற்றும் சாத்தான்குளத்தில் 2பேர் என மொத்தம் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.8,500 பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News