இன்று தடுப்பூசி முகாம் இல்லை : மாநகராட்சி ஆணையர்.

அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாக தஞ்சாவூர் ஆனையர் சரவணக்குமார் அறிவிப்பு.

Update: 2021-07-23 03:15 GMT

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு, தடுப்பூசி கையிருப்பை பொறுத்து சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கோவாக்ஷீன் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாகவும், மீண்டும் மாநகராட்சிக்கு, தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பின் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆனையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News