நூதனமுறையில் தங்கத்தை பதுக்கிய ஆசாமி: சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டான்
சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் ரூ.34.93 லட்சம் மதிப்புள்ள 723 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஷார்ஜாவின் ஏர் அரேபியா விமானம் வந்தபோது, ஏற்கனவே கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அவரை பரிசோதித்தபோது அவரது ஆசனவாயில் பசை வடிவிலான 723 கிராம் எடையுள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைப் பறிமுதல் செய்த அவர்கள் அந்தப் பயணியை கைது செய்தனர். தங்கத்தின் மதிப்பு ரூ.34.93 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.