சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவகுமார் காலமானார்
சேலத்தில் சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவகுமார் இன்று காலமானார் .;
சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வரும் சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.5 மணி அளவில் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 78 அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள அவரின் பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஹாஸ்பிட்டாலிட்டி அசோசியேசன் நிர்வாகிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் சென்று அவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரின் நல்லடக்கம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.