புதுக்கோட்டை நகராட்சியில் உலகமகளிர் நாள் விழா: தூய்மைபணியாளர்களுக்கு பரிசளிப்பு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி பெண் பணியாளர்களுக்கு மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.மகளிர் தின விழாவை முன்னிட்டு நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் திமுக மாவட்ட பொருளாளர் செந்தில் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.