புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு

புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-12-31 16:15 GMT

புதுக்கோட்டையில் நடைபெற்ற சிலம்பாட்டர் போட்டி

புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு , பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

,புதுக்கோட்டை ஸம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் 23.12.2023 முதல் 30.12.2023 வரை பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவுவிழா நேரு யுவ கேந்திரா, மாவட்டகுழந்தைகள் நலக் குழுமம், சிட்டி ரோட்டரி சங்கம்,செஞ்சுரி லயன்ஸ் சங்கம்,ஆகிய அமைப்புகள் இணைந்து பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ,புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி .எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கினார் புத்தாஸ் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின்தலைவர் சேது கார்த்திகேயன், விழா நோக்க உரையாற்றினார்

விழாவில்சிறப்பு விருந்தினராக ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான்,கார்த்திக் தொண்டைமான்,சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா,நகர் மன்ற தலைவர்திலகவதி செந்தில்,ஆகியோர் கலந்து கொண்டு தற்காப்பு கலை பயிற்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்து கூறினார்கள்

நிகழ்வில் ,நாட்டு நல பணித்திட்ட மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் நைனா முகமது,நகர்மன்ற உறுப்பினர்கள் சுபசரவணன்,நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு,ஆலோசகர் அனுராதா ஸ்ரீனிவாசன்,நேரு யுவ கேந்திரா உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம்,மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண மோகன்ராஜ்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அசோகன்,தக்க்ஷிணாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் பாலசுப்ரமணியன்,

புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்கத் தலைவர் மூர்த்தி ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம் பாபு,டெல்லி பப்ளிக் பள்ளியின் செயலாளர் பார்கவி கிருஷ்ணன்,திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கந்தசாமி,காவிரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் காசி ராஜேந்திரன்,சமூக ஆர்வலர் சபாரத்தினம்,புத்தாஸ் வீர கலைகள் கழக பொருளாளர்,ஜான்சிராணி ,ஆத்மா யோகா பாண்டியன்,மரம் மரம் ராஜா பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில்ஆகியோர் கலந்து கொண்டனர்....,முன்னதாக ஸம்ஸ்க்ருத வித்தியாலய ஓரியண்டல் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்பு ரையாற்ற, பள்ளியின்உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்

Tags:    

Similar News