புதுக்கோட்டையில் விஸ்வகர்மா ஜயந்தி விழா

புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதி புவனேஸ்வரி அதிர்ஷ்டானத்தில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

Update: 2022-09-18 17:45 GMT

மலர்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி

புதுக்கோட்டையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு அருள்மிகு பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதி புவனேஸ்வரி அதிர்ஷ்டானத்தில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் அதன் பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமியின் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மதியம் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரியநாச்சி அம்மன் கோவிலில் அன்னதான விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மாலையில் பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி மலர்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் நகரின் கீழராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜவீதி முக்கிய வீதிகள வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருள் பாலித்தார்.

Tags:    

Similar News