இணையவழி பட்டா மாறுதல் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி

E Patta Tamilnadu - புதுக்கோட்டை மாவட்டத்தில் உட்பிரிவுடன் கூடிய இணையவழி பட்டா மாறுதல் செய்வதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-08-22 06:00 GMT

 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது

E Patta Tamilnadu -புதுக்கோட்டை மாவட்டத்தில் உட்பிரிவுடன் கூடிய இணையவழி பட்டா மாறுதல் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உட்பிரிவுடன் கூடிய இணையவழி பட்டா மாறுதல் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் பணி தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களில் பரப்பு முரண்பாடுடைய மனுக்களை தீர்வு செய்வது, இணைய வழியில் உட்பிரிவு பட்டா மாறுதல்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது, புலப்படங்களின் அளவுகளில் உள்ள பரப்பளவினை கையாளுவது, உட்பிரிவு மனுக்களை தள்ளுபடி செய்யாமல் உரிய நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கிராம நிர்வாக அலுவலர்களிடம் நிலுவையில் உள்ள இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட நிலஅளவை ஆய்வாளர் பா.அப்பாஸ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News