பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் பேட்டி

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் பேட்டியில் கூறினார்.

Update: 2021-06-17 12:21 GMT

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  பொறுப்பேற்றுக்கொண்ட நிஷா பார்த்திபன்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிஷா பார்த்திபன் இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தது,  புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவர்கள் திருமணம், பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பிரச்னை என்றால் ஏற்கனவே மாவட்ட காவல்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தங்களுடைய புகார் தெரிவிக்கலாம். அதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கஞ்சா கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News