புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது

Update: 2022-05-07 05:30 GMT

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடந்த சஷ்டி சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  சஷ்டி யையொட்டி, காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலபிஷே கம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News