ஏப். 29 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

Update: 2022-04-26 04:15 GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29.04.2022 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வருகிற 29.04.2022-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் அனைவரும்; முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது 

Tags:    

Similar News