புதுக்கோட்டை அருகே தீயில் எரிந்த கூரை வீடு : 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

புதுக்கோட்டை கோவில்பட்டியில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

Update: 2021-06-10 08:30 GMT

புதுக்கோட்டையில் தீ பிடித்து எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மேல வீதி அருகே மாடியில் உள்ள கூரை வீட்டில் திடீரென தீ  ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு கூரை மற்றும் வீட்டினுள் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது

மேலும் அருகே தீ எதுவும் பரவாமல் இருக்க தீயணைப்புத்துறையினர் புகைந்து கொண்டிருந்த நெருப்பினை அனைத்து சென்றனர் தீ விபத்து குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News