புதுக்கோட்டையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டையில் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள் நாசர், ரகுபதி ஆகியோர் நலதிட்ட உதவிகளை வழங்கினர்.

Update: 2021-06-06 10:00 GMT

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வாழ்வாதாரம் பாதித்த ஏழைகளுக்கு நிவாரண உதவிகளை அமைச்சகள் நாசர், ரகுபதி வழங்கினர்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 37 வது வட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.  வட்ட திமுக  செயலாளர் ராஜதுரை ஏற்பாட்டின் பேரில் பேருந்து நிலையத்தின் முன்பு நடந்த நிகழ்ச்சியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ,நகர செயலாளர் நைனா முகமது, உள்ளிட்ட 37வது வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News