புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த ஜவுளிகடைகளுக்கு சீல்

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வியாபாரம் செய்த ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.

Update: 2021-06-10 15:10 GMT

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்து வியாபாரம் செய்த 10  ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை கீழராஜவீதி மற்றும் சாந்தநாத சுவாமி சன்னதி வீதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி  10க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள்   திறந்து வியாபாரம் செய்தனர்.

மேலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தகவல் அறிந்து வந்த  நகராட்சி நிர்வாகத்தினர்  மற்றும் வருவாய் துறையினர் பத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை பூட்டி சீல் வைத்து  மூடினர். மேலும் அவர்களுக்கு 35 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

Tags:    

Similar News