ஆலவயல் கூட்டுறவு சங்கத்துக்கு அகில இந்திய விருது வழங்கல்
அகில இந்திய அளவில் சிறந்த சங்கத்திற்கான முதல் பரிசு வென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்
அகில இந்திய மாநில கூட்டுறவ வங்கி இணையத்தால் சதீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் அகில இந்திய அளவில் சிறந்த சங்கத்திற்கான முதல் பரிசு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா MM 137 ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கான கேடயம் மற்றும் சான்றினை சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் , புதுக்கோட்டை மண்டல இனணபதிவாளர் உமாமகேஸ்வரி, சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் நிஜார்அலி, சங்க செயலாளர் பழனிச்சாமி மற்றும் சரக மேற்பார்வையாளர் சீனிவாசன்ஆகியேரிடம் வழங்கினார்.அகில இந்திய அளவில் சிறந்த சங்கத்திற்கான விருதுபெற்றதற்கு பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்