புதுக்கோட்டையில் நவராத்திரி விழா தொடக்கம்
நகரில் ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுஉள்ளது
புதுக்கோட்டையில் நவராத்திரி விழா தொடங்கியது.
இதையொட்டி நகரில் உள்ள ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுஉள்ளது. இந்த கொலுகண்காட்சியில் முருகன், விநாயகர், ராமர், மீனாட்சி, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன், தாசவரதார சிலைகள், மற்றும் கல்யாண வளைகாப்பு, போன்ற அரியநாச்சியம்மன்தேர் செட் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் காமராஜர், மகாத்மாகாந்தி, திருவள்ளுவர், அப்துல்கலாம், வள்ளலார், புத்தர், விவேகானந்தர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பொம்மைகளும் உள்ளது. இதையொட்டி ஆலயத்தில் ஸ்ரீ அரியநாச்சியம்மன் மூலவர் உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்