டீசல் விலை உயர்வு: புதுக்கோட்டை மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுக்கோட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-09 23:45 GMT

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மையம் கட்சியினர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில்,  மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் வரி உயர்வை கண்டித்து என்று அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர்கள் கஜேந்திரன் மற்றும் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,  புதுக்கோட்டை, திருமயம், அரிமளம் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு. கோஷம் எழுப்பினர். இந்நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பெட்ரோல்,  டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதத்தில் எரிவாயு சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து,  கும்மி அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News