முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு

சின்ன வயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை

Update: 2022-08-03 06:15 GMT

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாணவியை  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இந்த கிராமத்தை சேர்ந்த டீ கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாளின் 3 வது மகள் பவனியா தான் தற்போது  டிஎன்பிஎஸ்சி  நடத்திய  குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார்.

அரசு பள்ளி, கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற சாதனை பெண் பவானியாவை பலரும் பாராட்டி வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்  நேற்று நடந்த புத்தகத்திருவிழாவில்  பவனியாவை பாராட்டி பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி, ஐஏஎஸ்  இலக்கை வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.  மேலும் அதற்கான உதவிகளையும் செய்வதாகவும் கூறியுள்ளார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்பட பலரும் பாராட்டினர்.எனது சிறுவயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை அதற்கான பயணம் தொடர்கிறது என்றார் பவானியா.

Tags:    

Similar News