புதுக்கோட்டையில் கரையில் நின்ற கார் குளத்தில் பாய்ந்தது

புதுக்கோட்டையில் குளக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தானாகவே குளத்தில் மூழ்கியது.

Update: 2021-04-27 02:15 GMT

புதுக்கோட்டை கலிப் நகர் பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனி அருகே நகராட்சிக்கு சொந்தமான பெரியகுளம் ஒன்று உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் குளத்தில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இந்த தனியார் கம்பெனியில் கார்களை சர்வீஸ் செய்தும் தரப்படுகிறது, கார்களை குளக்கரை அருகில் நிறுத்தி வைக்கப் படுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று சொகுசு கார் ஒன்று டெலிவரிக்கு அந்தக் குளக்கரையில் இறக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சொகுசு காரில் ஹேண்ட் பிரேக் போடாத காரணத்தினால் திடீரென்று மெல்ல மெல்ல இறக்கத்தில் இறங்கி கார் குளத்தில் மூழ்கியது.

இதனை பார்த்த தனியார் கார் கம்பெனி நிர்வாகிகள் உடனடியாக ஓடிவந்து பிடிக்க முற்படும் முன் குளத்திற்குள் சொகுசு கார் முழுவதும் மூழ்கியது.ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு குளத்தில் மூழ்கிய சொகுசு காரை பின்னர் வெளியே எடுத்தனர்.

Tags:    

Similar News