இபாஸ், பதிவு இல்லாமல் எல்லையை தாண்டாதே : போலீஸ் எச்சரிக்கை

புதுக்கோட்டையில் இ/பாஸ் பதிவு இல்லாமல் மாவட்ட எல்லையை விட்டு தாண்டாதே என்று போலீசார் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-05-17 08:45 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோன வைரஸ் தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதைத் நிறுத்துவதாக இல்லை.

தொடர்ந்து அதிக அளவில் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் சுற்றி வருவதால் வைரஸ் தொற்று அதிகளவில் பாதிப்பு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வரும் நிலை உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நொய் சோற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் வெளியே வரும் வாகனங்களுக்கு மீண்டும் இ பாஸ் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

இதனை அடுத்து புதுக்கோட்டை நகர பகுதிகளில் கோவில்பட்டி திருக்கோகர்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் வைத்து புதுக்கோட்டையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியூரில் இருந்து புதுக்கோட்டைக்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களும் இ பாஸ் பதிவு உள்ளார்களா என காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு வாகனங்களை உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

Tags:    

Similar News