முதலமைச்சர் கோப்பை :மாநில குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவிகளுக்கு வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் புள்ளி கணக்கில் 2 மிடம் பெற்றனர்

Update: 2022-05-17 06:30 GMT

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துப்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாணவிகள்

முதலமைச்சர் கோப்பை மாநில குத்துச்சண்டை போட்டி: வென்ற மாணவிகளுக்கு ஆட்சியர் கவிதாராமு வாழ்த்து

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார்.2019-20 -ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை விளையாட்டுப்போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்ட ரங்கத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி யில் ஒட்டுமொத்த புள்ளி கணக்கில் இரண்டாம் இடம் பெற்றனர்.அதற்கான வெற்றிக் கோப்பையினை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வெற்றி பெற்ற வீராங்கனைகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், தடகள பயிற்றுநர் எஸ்.செந்தில் கணேசன், குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆர்.பார்த்திபன், எஸ்.அப்துல் காதர், கூடைப்பந்து பயிற்றுநர் க.சண்முகப் பிரியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News