புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட போட்டிகள்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன

Update: 2022-07-22 11:00 GMT

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முன்னோட்ட சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட விழிப்புணர்வு

44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவ, மாணவியர்களிடையே செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட விழிப்புணர்வு  சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், துவக்கி வைத்து பார்வையிட்டார் நிகழ்வில் சதுரங்கபயிற்சியாளர்கள் துணைத் தலைவர் அடைக்கலவன் செயலாளர் பேராசிரியர் கணேசன்,  அங்கப்பன் புதுகை செல்வம், வினிதாசெல்வம் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News