இடுகாட்டுக்கு வழியில்லை- இறந்தவர் உடலை வீட்டில் வைத்திருக்கும் அவலம்

Update: 2021-04-08 09:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளை கொல்லை கிராமத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல இடுகாட்டிற்கு வழி இல்லாததால் மூன்று நாட்களாக இறந்தவர் சடலம் வீட்டில் இருந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெள்ளை கொல்லை கிராமத்தில் துரைசாமி என்ற முதியவர் கடந்த 6ஆம் தேதி இறந்துள்ளார். இவருடைய உடலை இடுகாட்டிற்கு அந்த வழியாக எடுத்துச் செல்ல வழி இல்லாத காரணத்தினால் கடந்த 3 நாட்களாக வீட்டிலேயே சடலத்தை வைத்துள்ளனர். இன்று துரைசாமியின் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் இடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவர்கள் கூறுகையில் இறந்தவர் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல இறந்தவரது உறவினர் செல்வராசு என்பவர் இடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி னர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News