புதுக்கோட்டை 27வது வார்டில் அதிமுக வேட்பாளர் அப்பு வேட்பு மனு தாக்கல்

புதுக்கோட்டை நகராட்சி 27வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அப்பு என்கிற கனகசபை வேட்பு மனு தாக்கல் செய்தார்

Update: 2022-02-04 09:01 GMT

அதிமுக சார்பில் போட்டியிடும் அப்பு என்கிற கனகசபை வேட்பு மனு தாக்கல் செய்தார்

புதுக்கோட்டை நகராட்சி உள்ள 42 வார்டு கவுன்சிலர் பதவிக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது புதுக்கோட்டை நகராட்சி பொறுத்தவரை இதுவரை 168 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் இதனால் 10 மணி முதல் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குவிந்து வருகின்றனர். 

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அப்பு என்கிற கனகசபை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்து தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்  விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பர்வேஸ் 4 வது வார்டில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்

இதே போன்று அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்

இந்நிலையில் திமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் சுயேச்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர் இது வரை 15 வார்டுகளுக்கு மேல் திமுகவினர் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News