புதுக்கோட்டையில் 652 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

Update: 2021-03-02 07:45 GMT

புதுக்கோட்டையில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 652 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட கேஎல்கேஎஸ் நகரிலுள்ள நைனா முகமது என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 652 கிலோ பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கேரி பேக்குகள் ஆகியவற்றை நகராட்சி ஆணையர் ஜுவா சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சுகாதார பிரிவு ஆய்வாளர் பரக்கத் அலி மற்றும் அலுவலர்கள் இன்று காலை சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News