தனியார் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Update: 2021-10-02 07:03 GMT

புதுக்கோட்டை அருகே வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற காந்திஜெயந்தி விழா

காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்லூரியில் மகாத்மா காந்தி  உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்  தூவி மரியாதையை செய்தனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு கல்லூரியின் சேர்மன் கவிஞர் ஆர் .எம்.வீ .கதிரேசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். கல்லூரியின் தாளாளர் பி .கருப்பையா, .கல்லூரியின் முதல்வர் ஆர்.புகழேந்தி. மாணவ-மாணவியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்  

Tags:    

Similar News