நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் நுகர்வோர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான, மாதாந்திர மின் நுகர்வேர் குறைதீர் முகாம் டிச. 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-30 12:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான, மாதாந்திர மின் நுகர்வேர் குறைதீர் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மின் நுகர்வோர்களிடம் இருந்து, நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் டிசம்பர் மாதத்திற்கான, மின் நுகர்வோர் குறைதீர் முகாம்கள், சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

வருகிற டிச. 6ம் தேதி காலை புதன்கிழமை காலை 11 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. வருகிற 13ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 16ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 27ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு, மேற்பார்வை பொறியாளரிடம், நேரடியாக புகார் மனுக்களைஅளித்து மின்வாரியம் சம்மந்தமான குறைகளுக்கு தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News