நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

நாமக்கல்லில் உள்ள, அண்ணா அரசு கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2021-12-03 10:15 GMT

நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பில்,  மருத்துவ இயற்பியலின் நவீன உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் எனும் தலைப்பில்,  மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

இயற்பியல் துறை தலைவர் பங்காரு வரவேற்றார். உதவி பேராசிரியர் சேதுபதி, திருப்பூர் இன்ஜினியர் நந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இயற்பியலில் தற்போதுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் இயற்பியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் இயற்பியல் துறையை சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 190 பேர் பங்கேற்றனர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் சின்னுசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News