2 பள்ளி சிறுமிகளை கடத்திச்சென்று பலாத்காரம்: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

நாமக்கல்லில் 2 பள்ளி மாணவிகளான கடத்திச்சென்று பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2022-06-22 00:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் கண்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் வினோத் (21). புதன்சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த வேலன் மகன் சந்தோஷ் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அக்காள்-தங்கைகளான 17 வயது மற்றும் 15 வயது சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரும் சேர்ந்து அக்காள், தங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையில் தங்களது மகள்களை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறுமிகள் 2 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்குச் சென்று 2 சிறுமிகளை மீட்டனர். அங்கிருந்த வினோத், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிகள் 2 பேரும் 10-ம் வகுப்பு படிக்கும் அக்காள், 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை என்பதும், தற்போது அவர்கள் பள்ளி விடுமுறையில் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அக்காள், தங்கை இருவரும் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது வினோத், தனது நண்பர் சந்தோஷ் உதவியுடன் 2 பேரையும் கடத்தி நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வினோத், சந்தோஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News