தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகள் விற்பனை: கலெக்டர்

நாமக்கல் பகுதியில், சிட்கோ தாழில்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளன.

Update: 2024-10-10 02:15 GMT

பைல் படம் 

நாமக்கல் பகுதியில், சிட்கோ தாழில்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளன.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் அருகே, ராசாம்பாளையம் மற்றும் வேட்டாம்பாடியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகள், ஒதுக்கீடு செய்யப்படாத காலி தொழில் மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதன்படி ராசாம்பாளையம் தொழிற்பேட்டையில் 10 தொழில் மனைகள், வேட்டாம்பாடி தொழிற்பேட்டையில் 7 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளது.

புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர்,https://www.tansidco.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள பிற தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விபரங்களையும், மேற்கண்ட இதே வெப்சைட் மூலம் அறிந்து கொண்டு அதற்கும் விண்ணப்பம் செய்யலாம்,

நாமக்கல் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை காலி தொழில் மனைகளை பார்வையிட. கரூர் தாந்தோனிமலை பகுதியில், மாவட்ட தொழில் மைய வளாகத்தில் உள்ள, கரூர் சிட்கோ கிளை அலுவலக மேலாளரை நேரிலோ அல்லது 94450-96553 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது bmkrr@tansidco.org என்ற வெப்சைட் முகவரியிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News