நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 8 இடங்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-05-13 01:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேசன் கார்டு, செல்போன் நம்பர் பதிவு மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரேசன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நாளை 14ம் தேதி, காலை 10 மணிக்கு நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுக்கா வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் ரேசன் கார்டு சம்மந்தமான குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என டிஆர்ஓ கதிரேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News