நாமக்கல்லில் 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 27 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-05-24 23:30 GMT

பைல் படம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 27 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும், நேரடியாக சந்திக்கும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், வெள்ளிக் கிழமை தோறும் நடைபெறுகிறது.

மாதந்தோறும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடைபெறும். இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 27ம் தேதி காலை, 10.30 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவகலத்தில் நடைபெறுகிறது.

முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டன்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News