மேட்டுப்பட்டியில் கள்ளச்சாரய தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
மேட்டுப்பட்டியில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
நாமக்கல் போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, மதுவிலக்கு ஏடிஎஸ்பி மணிமாறன் அறிவுரையின்பேரில், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு சார்பில் மேட்டுப்பட்டி போலீஸ் செக்போஸ்டில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமை வகித்தார். இதில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைத்து பொதுமக்களுக்கும் கள்ளச்சாராயம் குடிக்கும் பணத்தை குழந்தைகளின் கல்விக்கு செலவிடு, கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு உயிர் இழப்பை தேடாதே, கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் கடவுள் வாழும் ஆலயம் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
மேலும், போதைப் பொருட்கள் பற்றிய புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு துறை போலீசார் பங்கேற்றனர்.