வள்ளிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ முகாம்

Update: 2022-04-24 12:15 GMT

வள்ளிபுரம் கிராமத்தில் அரசு சித்தா டாக்டர் பூபதி ராஜா தலைமையில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவ ட்டம், வள்ளிபுரம் வள்ளிபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, தோக்காதம்பாளையம் கிராமத்தில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு சித்தா டாக்டர் பூபதிராஜா தலைமையில், மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, கை, கால் வலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, பசியின்மை, முடக்குவாதம் போன்ற அனைத்து நோய்களுக்கும் கற்பூராதி தைலம் மற்றும் சித்தமருத்துவ மாத்திரைகள் வழங்கப்பட்டன. நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆலோசனையின் பேரில், சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News